மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக எரியும் காட்டு தீ-அரிய வகை மூலிகை செடிகள் நாசம்

நெல்லை மாவட்டம், புளியங்குடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை செல்லும்புளி பீட்டில் நேற்று முன்தினம் திடீரென காட்டு தீ பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ, நாராணபுரம் பீ்ட் பகுதிக்கும் பரவியது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குறைந்த அளவிலான வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் காற்று வேகமாக வீசி வருவதால் இன்று 3வது நாளாக தொடர்ந்து தீ எரிந்து வருகிறது.
நேற்று காலை புளியங்குடி வனசரகம் ஆர்தர்ராஜா, வனவர் முருகையா, வன காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், சிவகரி வனசரக ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அரை கி.மீ தூரத்திற்கு தீ படர்ந்து எரிவதால், அவர்களால் நெருங்க முடியவில்லை. இருப்பினும் தீயை அணைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
காட்டு தீயில் அரிய வகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் கோட்டைமலை பீட் அருகே உள்ள சோலைக்காடு பகுதியில் மூங்கில் மரங்களும், கோரப்பள்ளம் பகுதியில் தேங்கு, வேங்கை உள்ளிட்ட மரங்களும் தீயில் கருகின.












Click it and Unblock the Notifications