ஸ்டாலின் மீது தமிழக அரசு மீண்டும் அவதூறு வழக்கு

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியிருந்தது குறித்து விமர்சனம் செய்த திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது தமிழக அரசு இன்னொரு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.

முன்னதாக சென்னையில் காலரா பரவியுள்ளதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின் மீதும் அவரது செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் மீதும் முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந் நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியிருந்தது குறித்து விமர்சனம் செய்ததற்காக, சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஸ்டாலின் மீது இன்னொரு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதே போல ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியது குறித்து கருத்துத் தெரிவித்திருந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், அந்த கருத்துகளை வெளியிட்ட சில பத்திரிக்கை ஆசிரியர்கள் மீதும் தமிழக அரசு ஏற்கனவே அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+