வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள்

ஜெயலலிதா எப்பொழுதும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்தான். அதனால் அவரது ஒவ்வொரு அதிரடி முடிவின் பின்னாலும் ஒரு ஜோதிட காரணம் கூறப்படுவதுண்டு. கடந்த சில மாதங்களாக ஜெயலலிதா மேற்கொள்ளும் மாற்றங்கள் பொதுவாக அமாவாசையில்தான் நடந்தேறுகின்றனர். கடந்த அமாவாசையின் போது செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டிய ஆளுநர் விருந்தில் கலந்து கொள்ள ஜெயலலிதா ஆளுநர் மாளிகை சென்றிருந்தார். அங்கு ஆளுநர் ரோசய்யாவும் ஜெயலலிதாவும் தனியே ஐந்து நிமிடம் பேசியது கண்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கின்றனர் அமைச்சர்கள். இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையைவிட்டு வெளியேற்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்கின்றனர்.
அனேகமாக இம்முறை தென்மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலத்து புது எம்.எல்.ஏ.க்கள் சிலர் புதிய அமைச்சர்க்ளாக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தற்போதைய அமைச்சரவையில் சிலர் வெளியே தள்ளப்பட்டும் ஏற்கெனவே வெளியே தள்ளப்பட்டவர்களில் ஓரிருவர் மீண்டும் உள்ளே சேர்க்கப்பட்டும் அதிரடியை ஜெயலலிதா வெளிப்படுத்துவார் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications