வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது முக்கியமான முடிவுகளை அமாவாசை நாளில்தான் எடுக்கிறார் என்பது உறுதியாகிப் போய்விட்ட நிலையில் நாளை வரும் அமாவாசையை எண்ணி அதிமுக அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் நிர்வாகிகளும் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு கதிகலங்கிப் போயிருக்கின்றனர். அதும் சுதந்திர தின நிலையில் தெரிந்து தவறு செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று அதிரடியாக ஜெயலலிதா கூறியிருப்பதை சுட்டிக்காட்டு பெரிய தலை ஒன்று உருளப் போவது நிச்சயம் என்கின்றனர் அதிமுகவினர்.

ஜெயலலிதா எப்பொழுதும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்தான். அதனால் அவரது ஒவ்வொரு அதிரடி முடிவின் பின்னாலும் ஒரு ஜோதிட காரணம் கூறப்படுவதுண்டு. கடந்த சில மாதங்களாக ஜெயலலிதா மேற்கொள்ளும் மாற்றங்கள் பொதுவாக அமாவாசையில்தான் நடந்தேறுகின்றனர். கடந்த அமாவாசையின் போது செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டிய ஆளுநர் விருந்தில் கலந்து கொள்ள ஜெயலலிதா ஆளுநர் மாளிகை சென்றிருந்தார். அங்கு ஆளுநர் ரோசய்யாவும் ஜெயலலிதாவும் தனியே ஐந்து நிமிடம் பேசியது கண்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கின்றனர் அமைச்சர்கள். இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையைவிட்டு வெளியேற்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்கின்றனர்.

அனேகமாக இம்முறை தென்மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலத்து புது எம்.எல்.ஏ.க்கள் சிலர் புதிய அமைச்சர்க்ளாக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தற்போதைய அமைச்சரவையில் சிலர் வெளியே தள்ளப்பட்டும் ஏற்கெனவே வெளியே தள்ளப்பட்டவர்களில் ஓரிருவர் மீண்டும் உள்ளே சேர்க்கப்பட்டும் அதிரடியை ஜெயலலிதா வெளிப்படுத்துவார் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+