வேலூரில் தேசிய கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்டதா?-மேயர் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாநகாட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மேயர் கார்த்தியாயினி ஏற்றிய தேசிய கொடி தலைக்கீழாக பறப்பது போன்று காட்சி அளித்தது. ஆனால் தேசிய கொடி தலைக்கீழாக பறக்கவில்லை என்று வேலூர் மேயர் மறுத்துள்ளார்.

நாட்டின் 66வது சுதந்திர தின விழாவையொட்டி நேற்று காலை 9.30 மணியளவில், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் வேலூர் மேயர் கார்த்தியாயினி, துணை மேயர் வி.டி.தர்மலிங்கம், கமிஷனர் சீனி அஜ்மல்கான், மாநகர் நல அலுவலர் பிரியம்வதா மற்றும் மண்டல அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மேயர் கார்த்தியாயினி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது கொடி தலைகீழாக பறப்பது போன்ற காட்சி அளித்தது. இதை கண்டு அதிருப்தி அடைந்த மேயர், கொடியை கம்பத்தில் கட்டிய ஊழியர்களை கண்டித்தார். அதன்பிறகு தேசிய கொடியை கீழே இறக்கிய ஊழியர்கள், சரியாக ஏற்றி பறக்கவிட்டனர். சுதந்திர தின விழாவில், தேசிய கொடி தலைக்கீழாக பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தேசிய கொடி தலைக்கீழாக பறந்த சம்பவத்தை வேலூர் மேயர் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நேற்று காலையில் நான் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டேன். மாநகராட்சி வளாகத்தில் நான் தேசிய கொடியை ஏற்றிய போது, கயிற்றின் முடிச்சு அறுந்திருந்தது. இதனால் கொடி தலைக்கீழாக பறப்பது போல காட்சி அளித்தது.

இதையடுத்து சில நிமிடங்களில் ஊழியர்கள் கொடியை சரி செய்து பறக்கவி்ட்டனர். ஆனால் கொடியை கீழாக பறக்கவிட்டதாக, சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது போன்ற தவறான வதந்திகளை பரப்புபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+