ஆப்பிள் நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பொருட்களை கொள்ளையடித்தவன் சிக்கினான்

சான்பிரான்சிஸ்கோ நகரில் ஸ்டீவ் ஜாப்ஸ் வசித்து வந்த வீடு தற்போது பூட்டப்பட்டிருக்கிறது. அவரது மனைவி வேறொரு வீட்டில் குடியிருந்து வருகிறது. இந்நிலையில் திருடன் டோசி கரெம் மெக்பர்லின் என்பவன் பூட்டிக் கிடந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டுக்கு குறி வைத்து உள்ளே நுழைந்திருக்கிறான். ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய ஐபேட், ஐ போன்கள் உள்ளிட்ட் 65ஆயிரம் டாலர் மதிப்பிலான பொருட்களை திருடி கொண்டு சென்றுவிட்டான்.
எடுத்துச் சென்ற பொருட்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மனமில்லாமல் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறான். ஸ்டீவ் ஜாப்ஸின் சர்வரை ரீ இன்ஸ்டால் முயற்சியில் இறங்கிய போது அது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு சொந்தமானது என்று காட்டிக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டுப் பொருட்களைத் திருடியவனைத் தேடிய போலீசாருக்கும் சர்வரிலிருந்து வந்த தகவல்கள் உதவின. இதையடுத்து பின்னர் சந்தேக நபரான டோசியின் கலிபோர்னியா குடியிருப்புக்குச் சென்று களவுபோன ஸ்டீவ் ஜாப்ஸுக்கு சொந்தமான அத்தனை பொருட்களையும் கைப்பற்றியிருக்கின்றனர்.
தாம் திருடியது ஸ்டீவ் ஜாப்ஸ் வீடுதான் என்பது அந்தத் திருடனுக்கும் தெரியாதாம். தாம் இதேபோல் சான்பிரான்சிஸ்கோ பகுதிகளில் நான்கைந்து வீடுகளில் களவாடியதையும் அவன் ஒப்புக் கொண்டிருக்கிறானாம்.












Click it and Unblock the Notifications