வடகிழக்கு மாநிலத்தவரிடம் பீதியை ஏற்படுத்தும் எஸ்.எம்.எஸ். பாக்.கிலிருந்து அனுப்பப்பட்டது

இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கூறியுள்ளதாவது:
மியான்மரில் நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்களை அசாம் வன்முறையில் உயிரிழந்தோரின் புகைப்படமாக போர்ஜரி செய்து எம்.எம்.எஸ். அனுப்பியிருக்கின்றனர். மொத்தம் 76 இணையதளங்கள் இப்படி போலி புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாகிஸ்தான் நாட்டில் இருந்தே அனுப்பி அப்லோடு செய்யப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு வெளிவிவகார அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய எம்.எம்.எஸ். அனுப்பிய 100 இணையதளங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இப்படியான போலி புகைப்படங்களை வெளியிட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய மின்னஞ்சல்களை அனுப்புவோரின் கணிணி ஐபி எண்களை தருமாறு கூகுள் மற்றும் மின் அஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் கோரியிருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications