சிறப்புத் தொழுகையுடன் நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஈத் உல் பிதர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்புத் தொழுகையில் முஸ்லீம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.
ரம்ஜான் மாத நோண்புக் காலத்தை சிறப்பாக முடித்து இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்களுக்கு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று காலை சிறப்புத் தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையிலும் ரம்ஜான் சிறப்புத் தொாழுகை நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதேபோல மதுரையில் தமுக்கம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications