கு.சின்னப்பப்பாரதி அறக்கட்டளையின் சிறந்த மொழிப்பெயர்ப்பு விருதை வென்றார் கி.இலக்குவன்
நாமக்கல்: தீக்கதிர் கட்டுரையாளர் கி.இலக்குவனின் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்ற மொழிப்பெயர்ப்பு நூலுக்கு, கு.சின்னப்பப்பாரதி இலக்கிய கருத்தரங்க அறக்கட்டளை பரிசு அறிவித்துள்ளது.
நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது கு.சின்னப்பப்பாரதி இலக்கியக் கருத்தரங்க அறக்கட்டளை. ஒவ்வொரு ஆண்டும் நாவல், கட்டுரை, சிறுகதை, மொழிப்பெயர்ப்பு நூல் உள்ளிட்டவைகளில் சிறந்த படைப்புகளை பாராட்டி, இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் பேராசான் இ.எம்.எஸ். ஆங்கிலத்தில் எழுதிய ‘ஹிஸ்டரி ஆ பிரிடம் ஸ்டிராகிள்' என்ற நூலை தீக்கதிர் கட்டுரையாளர் கி.இலக்குவன் தமிழில் மொழிப்பெயர்த்து, இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் மூலம் வெளியிட்டார்.
கி.இலக்குவனின் இந்த மொழி பெயர்ப்பு நூல், இந்த ஆண்டின் சிறந்த படைப்பிற்கான விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கி.இலக்குவனின் மொழிப்பெயர்ப்பு நூலை பாராட்டி, வரும் 2-10-2012 அன்று நாமக்கல்லில் நடைபெற உள்ள விழாவில், கு.சின்னப்பாரதி இலக்கியக் கருத்தரங்க அறக்கட்டளை சார்பாக, ரூ.10 ஆயிரம் பரிசும், கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications