அவதூறு வழக்கு: கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், ராமதாஸுக்கு நீதிமன்றம் சம்மன்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi and Stalin
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

முதல்வர் கொடநாட்டில் தங்கி இருந்தது குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மீது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இது தவிர அதிமுக ஆட்சி குறித்து அறிக்கை வெளியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் மீதும் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும் தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி சில பத்திரிக்கைகள் மீதும் அவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த அவதூறு வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதி பி. கலையரசன் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் முரசொலி ஆசிரியர், ஆகியோரை வரும் அக்டோபர் 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் ஜெயலலிதா நாளிதழ்கள் மற்றும் பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்கு போடுவது குறித்து விமர்சித்தது தொடர்பான வழக்கில் அக்டோபர் 10ம் தேதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்றுமொறு அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் அக்டோபர் 15ம் தேதியும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அக்டோபர் 9ம் தேதிக்குள்ளும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+