துரை தயாநிதி, பி.ஆர்.பி. மகன்கள் உட்பட 12 பேரின் பாஸ்போர்ட்டை முடக்க பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

Durai Dayanidhi
மதுரை: மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று மதுரை மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, விஜயராகவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதில், பி.ஆர். பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உட்பட 12 பேரின் பாஸ்போர்ட்டை முடக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்கின்றனரா? என்பதை கண்காணிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மனுதாரர் தரப்பு பதில் அளிக்க வசதியாக வழக்கை வரும் 31-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+