வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் பலி
காரகாஸ்: வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39க உயர்ந்துள்ளது.
வட அமெரிக்க நாடான வெனிசுலாவின் வட பகுதியான பாராகுவானாவில் உள்ளது அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். உலகின் மகிப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான அமுவேயில் நேற்று தீ விபத்து ஏற்பட்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 26 பேர் பலியாகினர், மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 26ல் இருந்து 39க உயர்ந்துள்ளது.
அங்கு விபத்து ஏற்பட்டதும் அதன் அருகில் இருந்த கடைகள், வீடுகள் குலுங்கின. சுத்திகரிப்பு நிலையத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது என்று அதன் அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், நாளை முதல் பணிகள் மீண்டும் துவங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெனிசுலா துணை அதிபர் எலியாஸ் கூறுகையில்,
அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39க உயர்ந்துள்ளது. பலியானோர்களில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 18 பேர் அடக்கம். இறந்தவர்களில் 6 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார்.
இந்த விபத்து மிகவும் கவலை அளிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று வெனிசுலா அதிபர் ஹுகோ சவேஸ் தெரிவித்துள்ளார். மேலும் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications