தலித் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க எதிர்ப்பு- தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தின் மதுரை மாவட்டம் குரையூர் கிராமத்து அரசு பள்ளியில் ஆதிரதிராவிடர் வகுப்பு மாணவர்களை சேர்க்க ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர், 1980 ஆம் ஆண்டு முதல் குரையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் வகுப்பு குழந்தைகளை அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்ப்பது இல்லை. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானது. இதன் அடிப்படையில் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications