ராஜ்தாக்கரே ஒன்றும் மும்பையின் பூர்வகுடி அல்ல.. பீகாரிலிருந்து குடியேறியவர்தான்...
டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மராட்டியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று அவ்வப்போது கூச்சல் போட்டு வன்முறையைத் தூண்டும் மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே இப்பொழுது வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்.
மும்பையில் அண்மையில் ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ஒருவரை மும்பை போலீசார் கைது செய்தனர். இதற்கு பீகார் தலைமைச் செயலர் எதிர்ப்புத் தெரிவித்து மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த ராஜ்தாக்கரே, பீகாரிகளை ஊடுருவல்காரர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் கூறியிருந்தார்.
ராஜ்தாக்கரேயின் இக்கருத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் திக்விஜய்சிங், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் ராஜ்தாக்கரே என்று ஒரேயடியாகப் போட்டுத்தாக்கினார். அப்படியானால் ராஜ்தாக்கரேயும் ஒரு ஊடுருவல்காரர்தானா? என்றும் கேள்வி எழுப்பியதுடன் மும்பையில் குடியேறும் முன்பு அவர் பீகாரிலிருந்து மத்திய பிரதேசத்தில் செட்டிலாகி இருந்தார் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் மும்பை நகரமானது உண்மையில் மீனவர்களின் குடியிருப்புப் பகுதி என்றும் மற்ற அனைவருமே வந்தேறிகள்தான் என்றும் அதிரடி காட்டியிருக்கிறார்.
இதுக்குப் பெயர்தான் பூமாராங்கிப் போன கதையோ!
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications