குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் காலம் கடந்து மழை பெய்து வருவதால் தண்ணீரில்லாமல் விவசாயத்தை நிறுத்தி வைத்திருந்த விவசாயிகள் தற்போது விவசாயப் பணிகளைத் துவங்கியுள்ளனர்.
மேலும் இந்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். குற்றாலத்தில் சீசன் தொடங்கியது முதல் நேற்று வரை வெள்ளம் வரவில்லை. ஆனால் சீசன் முடிந்த பின்பு வெள்ளம் வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
காலம் கடந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் வேதனையோடு விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications