ஆச்சு 5 மாதம்... சின்ன 'க்ளூ' கூட கிடைக்காமல் இழுத்துக் கொண்டிருக்கும் ராமஜெயம் கொலை வழக்கு
Subscribe to Oneindia Tamil

மார்ச் 29-ந் தேதியன்று ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பற்றி பல கோணங்களில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார் மொத்தம் 3 ஆயிரம் செல்போன் எண்களைத் திரட்டி இதுவரை 1500 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதாவது ராமஜெயம் கொலைக்கு மொத்தம் 60 காரணங்கள் இருக்கலாம் என பட்டியல் போட்டு ஒவ்வொரு காரணத்திலும் ராமஜெயத்துடன் மோதியவர்கள் பெயர்களை எழுதி விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
இந்த வழக்கில் மொத்தம் 105 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி ஐந்து பேரை மட்டும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறதாம் சிபிசிஐடி. ஆனாலும் இதில் பெரிய கூத்து என்னவெனில் ராமஜெயம் வாக்கிங் போனதாக சொல்லப்படுவதே உண்மையா? பொய்யா என இன்னும் உறுதிப்படுத்த முடியாமல் சிபிசிஐடியும் தவித்ததுவருவதுதான் என்கின்றனர்..












Click it and Unblock the Notifications