ஆச்சு 5 மாதம்... சின்ன 'க்ளூ' கூட கிடைக்காமல் இழுத்துக் கொண்டிருக்கும் ராமஜெயம் கொலை வழக்கு

Subscribe to Oneindia Tamil

Ramajaym murder
திருச்சி: திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் உருண்டோடி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டும் கூட இன்னும் ஒரு க்ளூ கூட கிடைக்காமல் கை பிசைந்து வருகின்றனர்.

மார்ச் 29-ந் தேதியன்று ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பற்றி பல கோணங்களில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார் மொத்தம் 3 ஆயிரம் செல்போன் எண்களைத் திரட்டி இதுவரை 1500 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதாவது ராமஜெயம் கொலைக்கு மொத்தம் 60 காரணங்கள் இருக்கலாம் என பட்டியல் போட்டு ஒவ்வொரு காரணத்திலும் ராமஜெயத்துடன் மோதியவர்கள் பெயர்களை எழுதி விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

இந்த வழக்கில் மொத்தம் 105 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி ஐந்து பேரை மட்டும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறதாம் சிபிசிஐடி. ஆனாலும் இதில் பெரிய கூத்து என்னவெனில் ராமஜெயம் வாக்கிங் போனதாக சொல்லப்படுவதே உண்மையா? பொய்யா என இன்னும் உறுதிப்படுத்த முடியாமல் சிபிசிஐடியும் தவித்ததுவருவதுதான் என்கின்றனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+