தண்ணியைப் போட்டு வண்டி ஓட்டுனா எல்லா ஊர்லயும் இப்படித்தான் அடிப்பாங்க போல!
மாஸ்கோ: ரஷ்யாவில் குடிபோதையில் குண்டக்க மண்டக்க புல்டோசரை ஓட்டி பல கார்களை சேதப்படுத்திய டிரைவரை, அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்து வண்டியை விட்டு கீழே இறக்கினர்.
குடிபோதையில் வண்டி ஓட்டுவது உலகம் முழுவதும் படு சாதாரணம். அவர்களால் விபத்துக்கள் நடப்பதும், உயிரிழப்பு, படுகாயம், சேதம் ஆகியவை ஏற்படுவதும் படு சாதாரணமாகி விட்டது.
இந்த நிலையில் ரஷ்யாவில் ஒரு புல்டோசர் டிரைவர், குடிபோதையில் குண்டக்க மண்டக்க ஓட்டி ஏகப்பட்ட கார்களை நாஸ்தி செய்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் புல்டோசரில் ஏறி அந்த டிரைவரா உண்டு இல்லை என்று செய்து விட்டனர். அப்படியும் கோபாம் தீராமல் கீழே இறக்கிப் போட்டும் அடித்துத் துவைத்தெடுத்து விட்டனர்.
சம்பவத்தின்போது ஒரு புல்டோசர் அங்குமிங்குமாக ஒரு சீரில்லாமல் வந்ததை சிலர் பார்த்து குழம்பி நின்றனர். நல்ல வேகத்திலும் அந்த புல்டோசர் வந்தது. அது ஒரு ஷாப்பிங் வளாகமாகும். அங்கு ஏகப்பட்ட கார்களை பார்க் செய்து நிறுத்தி வைத்திருந்தனர். யானை கரும்புக் காட்டுக்குள் புகுந்தால் என்னாகும்... அது போல, அந்த புல்டோசர் பார்க்கிங் லாட்டில் இருந்த கார்களை சரமாரியாக நொறுக்கித் தள்ளியபடி சென்றது.
இதைப் பார்த்து காரின் உரிமையாளர்களும், அங்கு நின்றிருந்தவர்கள் கடும் கோபமடைந்தனர். வேகமாக ஓடி வந்த அவர்கள் புல்டோசரை நிறுத்தினர். பின்னர் அதில் சிலர் ஏறி டிரைவரைப் போட்டு சாத்தினர். பின்னர் டிரைவரை கீழே இறக்கிக் கொண்டு வந்து அத்தனை பேரும் சேர்ந்து குமுறி விட்டனர். அந்த டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இந்த தர்ம அடி காட்சியை சிலர் யூடியூபில் போட்டுள்ளனர்.
'சேம் பிளட்'.. பாரபட்சமே இல்லாம எல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான் தர்ம அடி கொடுக்கிறாங்க போல...!












Click it and Unblock the Notifications