Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாமீன் கோரிய ஷானாஸின் மனுக்கள் மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

Shanaz
சென்னை: திருமண மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கேரள இளம் பெண் ஷானாஸ் தாக்கல் செய்திருந்த நான்கு ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

திருமண மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் பெண் ஷானாஸ் சென்னைம முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி 4 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.

அடையாறு, மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் முறையே ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் கொடுத்த புகார்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கேட்டு இரு மனுக்களையும், பின்னர், அடையாறு, மாம்பலம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மேலும் 2 மனுக்களையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

அதில், என் மீது ராஜா, சரவணன் ஆகியோர் திருமண மோசடி புகார் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் என் மீது 4 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனக்கும், அந்த குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை. என் மீது பொய்ப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நான் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எனவே என்மீது 4 போலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள வழக்குகளில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த 4 மனுக்கள் எல்லாம் முதன்மை அமர்வு நீதிபதி பொன்.கலையரசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷானாஸ் சார்பில் வழக்கறிஞர் சிவா ஆஜரானார். அரசுத் தரபப்ில் வக்கீல் ஜெகன் ஆஜரானார். அவர் நீதிபதியிடம் கூறுகையில், மாம்பலம், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் ஷானாஸ் மீது வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

அடையாறு, மாம்பலம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.

அப்போது சென்னை உயர்நீதிமன்ற பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரசன்னா ஆஜராகி, தன்னை வக்கீல் என்று கூறி மோசடி செய்துள்ளார் ஷானாஸ். இதன் மூலம் அவர் பெண் வக்கீல்கள் சமுதாயத்துக்கே களங்கம் ஏற்படுத்தி விட்டார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரி நாங்கள் மனு செய்யவுள்ளோம். அதற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரினார். இந்தக் கோரிக்கையை நீதிபதி ஏற்றார்.

அதேசமயம், அடையாறு சரவணன் சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ஷானாஸுக்கு ஜாமீன் தருவதை எதிர்த்து மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார். இதையடுத்து இன்றைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மீண்டும் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பில்,
அடையாறு சரவணன் ஷானாஸ் மீது புகார் தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சரவணன் கொடுத்த புகாரின் தன்மை என்ன, எங்கு புகார் கொடுத்தார் என்பது குறித்து விளக்கம் அளித்து தெளிவுபடுத்த உத்தரவிட்ட நீதிபதி நாளைக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+