சிவகாசி பட்டாசு ஆலை விபத்து குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் விளக்க நோட்டீஸ்
விருதுநகர்: 38 பேரை பலி கொண்ட சிவகாசி பட்டாசு ஆலை விபத்து குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே 38 பேரை பலி கொண்ட இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி மாவட்ட விசாரணையை தொடங்கியுள்ள மாவட்ட வருவாய் அதிகாரி ராஜு கூறியதாவது:
முதலமைச்சர் உத்தரவிட்டபடி பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து நீதி விசாரணை தொடங்க ஆட்சியர் உத்தரவு பிறப்பிப்பார். இதையடுத்து வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை பகுதிகளை நேரில் பார்வையிட்டு அந்த ஆலையின் ஆவணங்களை கைப்பற்றி அவற்றை பரிசீலனை செய்து விதிமீறல்கள் பற்றிய அறிக்கை தயார் செய்யப்படும்.
வெடி விபத்து குறித்து விவரம் அறிந்தவர்களின் சாட்சியங்களும் பெறப்படும். குறிப்பிட்ட தேதியில் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். தற்போது உள்ள நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கான விசாரணை நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications