கூடங்குளம் விவகாரம்: உதயகுமார் இன்றாவது சரணடைவாரா?

கூடங்குளம், இடிந்தகரையில் நேற்று முன்தினம் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று மாலை இடிந்தகரை வந்த அவர் இரவு 9 மணிக்கு கூடங்குளம் காவல் நிலையத்தில் சரணடையப் போவதாக அறிவித்தார். ஆனால் அவரை சில இளைஞர்கள் படகில் ஏற்றிச் சென்று கூத்தங்குழி மீனவ கிராமத்தில் ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று இரவு இடிந்தகரை வந்த சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கூத்தங்குழி சென்று உதயகுமாரை சந்தித்து போலீசில் சரணடைய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் போலீசார் உதயகுமாரை கைது செய்ய முயன்று வருகின்றனர். ஆனால் அவரை போலீசார் கைது செய்வதை தடுக்க ஊத்தங்குழி மக்கள் ஊரைச் சுற்றி நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் போலீசாரால் ஊருக்குள் செல்ல முடியவில்லை.
உதயகுமார் சரண் அடைந்தால் அமைப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கெஜ்ரிவால் தெரிவி்த்துள்ளார். நடப்பு நிகழ்வுகளைப் பார்க்கையில் உதயகுமார் சரணடைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications