கர்நாடக பேரவைத் தேர்தல்: தமிழருக்கு 6 தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்க கோரிக்கை
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தமிழர்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, சோனியாகாந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கர்நாடகத்தின் மக்கள்தொகையில் 5.46 விழுக்காட்டினர் தமிழர்கள் வசித்துவருவதாக 2001ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனால் 2008ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடம்கூட தமிழருக்குக் கொடுக்கவில்லை. வழக்கமாக தமிழர்களுக்கு அளித்துவந்த 3 இடங்களையும் தரவில்லை. மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம், தமிழர்களுக்கு எந்த தொகுதியும் வழங்கப்படவில்லை.
கர்நாடகத்தில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் உணர்வை மதித்து 2013ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தமிழர்கள் போட்டியிட பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். தமிழர்களின் மக்கள்தொகைக்கேற்ப குறைந்தது 12 இடங்களில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இது சாத்தியப்படாத நிலையில், குறைந்தது 6 இடங்களிலாவது போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இதில் 3 இடங்களை ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications