சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு: கேரளாவில் அனுமதி இல்லை - காங். அறிவிப்பு
கொச்சி: சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் காங்கிரஸ் ஆளும் கேரள மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் நிலையை நாங்கள் ஆதரிக்கவில்லை. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை கேரளாவில் அனுமதிக்க முடியாது என்றார்.
மேலும் மத்திய அரசு இத்தகைய முடிவெடுத்தாலும் மாநிலங்களின் முடிவுகளுக்கு விட்டிருப்பதால்தால் நிச்சயமாக கேரளம் இதனை நடைமுறைப்படுத்தாது என்றார் அவர்.
எதிர்க்கட்சியான பாஜக ஆளும் மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆளும் கேரள மாநில அரசும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications