மேலூர் டயர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து -4 பேர் கருகி பலி
Subscribe to Oneindia Tamil
மேலூர்: மேலூர் அருகே டயர் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் கருகி பலியாகினர்.
வெள்ளரிப்பட்டி ஸ்ரீசக்ரா டயர் ஆலையின் குடோனில் இன்று காலை தீ பிடித்தது. அப்போது தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பலரும் தீயில் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புப் படையினர் அவர்களை மீட்டுக் கொண்டிருந்தனர் அப்போது முதலில் 3 தொழிலாளர்கள் தீயில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டோரில் மேலும் ஒருவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இருப்பினும் பலத்த தீக்காயமடைந்தோர் பலரும் மீட்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications