சென்னை அமெரிக்க தூதரகத்தை 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டம்
சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் படத்துக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும்விதமாக சென்னையில் இன்று 2-ம் நாளாக அமெரிக்க தூதரகம் முற்றுகைக்குள்ளானது.
சென்னை அண்ணா தூதரகத்தை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்புகள் தூதரகம் மீது தாக்குதல் நடத்தின. அமெரிக்க தூதரகம் மீது கற்கள் வீசித் தாக்கப்பட்டன. போலீஸ் பூத்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பல நூறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட திரண்டனர். அவர்கள் அனைவரும் சென்னை பீட்டர்ஸ் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்..
இன்றைய போராட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவப் படம் எரிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு எதிராக் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் திடீரென அமெரிக்க தூதரகம் அருகே சிலர் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.
2-வது நாளாக சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டதால் அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர் போராட்டங்களால் அமெரிக்க தூதரகப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications