தியாவ்யூ தீவு விவகாரம்; ஜப்பானுக்கு எதிராக சீனாவில் தொடர் கண்டன போராட்டங்கள்
பெய்ஜிங்: கிழக்கு சீனக் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு வளம் மிக்க தியாவ்யூ தீவை விலைக்கு வாங்கி ஜப்பான் தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சீனா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தியாவ்யூ தீவை சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வந்தன.ஆனால் ஜப்பானோ தியாவ்யூ தீவை விலைக்கு வாங்கி தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சீனாவின் 6 உளவு கப்பல்கள் அப்பகுதியில் முற்றுகையிட்டு உள்ளன. இதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனிடையே சீன தலைநகர் பீஜிங்கில் ஜப்பான் தூதரகத்தை முற்றுகையிட்டு சீனர்கள் நேற்றும் இன்றும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜப்பான் தூதரகம் மீது உருட்டுக் கட்டைகளையும் முட்டைகளையும் பாட்டில்களையும் வீசி எறிந்தனர்.
ஜப்பானின் இந்த நடவடிக்கைகளினால் கடுப்படைந்துள்ள சீனர்கள், அந்நாட்டு அரசாங்கத்தை போரில் ஈடுபடுமாறும் வலியுறுத்தி வருகின்றனர். ஜப்பானிய பொருட்கள் மீது தடைவிதிக்குமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.
இச்சம்பவங்களைக் கண்டித்துள்ள ஜப்பான் பிரதமர் யோஷிகிஹோ, ஜப்பானியரின் பாதுகாப்பை சீன அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications