சர்சைக்குரிய படம்.. தாக்குதல் பீதி: தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
நெல்லை: இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் படத்தை எடுத்தற்காக அமெரிக்காவை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதை அடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள், குடோன்கள் மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்தவர் எடுத்த திரைப்படத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காரணத்திற்காக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தமுமுகவினர் தாக்கினர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள், குடோன்கள், மற்றும் அலுவலகங்கள் மீது சில அமைப்பினர் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், குளிர்பான உற்பத்தி தொழிற்சாலைகள், குடோன்கள் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications