ராஜபக்சே வருகையை எதிர்த்து புதுவையில் பந்த்.. வெறிச்சோடியது நகரம்
புதுச்சேரி: ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநிலத்தில் இன்று கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. முழு அடைப்புப் போராட்டத்தினால் புதுச்சேரி நகரத் வெறிச்சோடியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 21ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தர உள்ளார். இதற்கு தமிழ் ஆர்வலர்களும், மதிமுக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து புதுச்சேரியில் இன்று காலை முதல் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. முக்கிய நகரப் பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. சில பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் புதுச்சேரி நகரில் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications