காங். ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்கள் வழங்க முடிவு- காங்கிரஸ் அறிவிப்பு

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே இனி மானிய விலைக்கு தரப்படும். அதற்கு மேல் வாங்கும்போது முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும் என்று மக்கள் தலையில் சிலிண்டரைத் தூக்கிப் போட்டது மத்திய அரசு.
நாடு முழுவதும் இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. இதையடுத்து திரினமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், தனது மாநிலத்தில் வருடத்திற்கு 9 சிலிண்டர்கள் மானிய விலைக்குத் தரப்படும் என்று சமீ்பத்தில் அறிவித்தார். தற்போது இந்த திட்டத்தை காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், டெல்லியில் வருடத்திற்கு 9 சிலிண்டர்களை மானிய விலைக்கு வழங்க அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதேபோல காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களிலும் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
அப்படியென்றால் காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் வசிப்போர் எல்லாம் பாவப்பட்டவர்களா அல்லது சாப்பிடாமல் செத்துப் போகட்டும் என்று காங்கிரஸ் கூற விரும்புகிறதா என்று தெரியவில்லை.
-
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications