சென்னையில் 'பந்த்'துக்கு மத்தியிலும் ஜோராக இயங்கிய ஐடி நிறுவனங்கள்!

Subscribe to Oneindia Tamil

Tidelpark
சென்னை & பெங்களூர்: கர்நாடகத்தில் முழு அளவில் பாரத் பந்த் நடந்தாலும் கூட, பெங்களூரில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கின. மிகக் குறைவான நிறுவனங்களே விடுமுறை அறிவித்திருந்தன. அதேபோல சென்னையில் ஐடி நிறுவனங்கள் முழு அளவில் இயங்கின.

பாரத் பந்த் காரணமாக பெங்களூர் நகரமே வெறிச்சோடிப் போய் விட்டது இன்று. வழ்ககமாக மோசமான டென்ஷனை வரவழைக்கும் டிராபிக் நெரிசல் இன்ற சுத்தமாக இல்லை. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சில நிமிடங்களில் போய் விடலாம். அந்த அளவுக்கு ரோடுகள் எல்லாம் துடைத்துப் போட்டது போல பளிச்சென காணப்பட்டன.

பந்த் காரணமாக அனைத்துத் தொழில்நிறுவனங்களும் செயல்பவில்லை, மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை, பள்ளி கல்லூரிகள் இயங்கவில்லை. அனைத்து முக்கியச் சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன.

இருப்பினும் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கின. சில நிறுவனங்கள் மட்டுமே செயல்படவில்லை. அலுவலகத்திற்கு வர முடியாத ஊழியர்கள் தங்களது வீடுகளிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். சில நிறுவனங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் விடுமுறை அறிவித்திருந்தன. இதனால் அவை மட்டும் மூடப்பட்டிருந்தன.

மற்றபடி 'தம்' அடிக்க சிகரெட் கூட கிடைக்காமல் மக்கள் திண்டாடும் அளவுக்கு பெங்களூரில் இன்று பந்த் முழுமையாக இருந்தது!.

சென்னையில்

சென்னையைப் பொறுத்தவரையில் ஐடி நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட்டன. இயல்பு நிலை சென்னையில் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதால் ஐடி நிறுவனங்களின் செயல்பாடும் பாதிப்புக்குள்ளாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+