புதிய நண்பர்கள் இருப்பதால் எங்கள் ஆட்சி கவிழாது: ப.சிதம்பரம் நம்பிக்கை
டெல்லி: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைத் தன்மைக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை; எங்களுக்கு புதிய நண்பர்களின் ஆதரவு உள்ளது. எனவே, மத்திய அரசு கவிழாது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலுவாக உள்ளது. புதிய நண்பர்களைப் பெறுவதில் எங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. முன்பும், இப்போதும் எங்களுக்குப் போதிய நண்பர்கள் உள்ளனர். எனவே ஸ்திரத்தன்மைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை'' என்றார்.
புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, "அதிலென்ன சந்தேகம். வாய்ப்பு இருந்தால் புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்வதில் என்ன தவறு?'' என்றார் ப.சிதம்பரம்
310 எம்.பிக்கள் ஆதரவு இருக்கு....
இதேபோல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸின் அம்பிகாசோனி, அரசுக்கு 310 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது/ அரசின் இந்தக் கடின முடிவுகளைத் (டீசல் விலை உயர்வு, அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி) தவிர்க்க முடியாது என்று அவர்கள் உணர்ந்துள்ளனர். முன்கூட்டியே தேர்தல் வருவது நாட்டு நலனுக்கு நல்லதல்ல என்பதை பல அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்'' எனறார்.












Click it and Unblock the Notifications