தமிழகத்தில் மின்தடை வரும் டிசம்பரில் இருந்து குறையும்: மின்துறை அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் ஏற்பட்டு வரும் மின்தடையை போக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் மின்தடை குறையும் என்று தமிழக மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நெல்லை அதிமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இதில் தமிழக மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு மின்தடை குறையும் என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

மத்திய அரசின் உதவி இல்லாமல் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். இதனால் தமிழகம் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறைக்கு கடந்த திமுக ஆட்சியின் செயல்பாடுகள் தான் காரணம். தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வரும் முதல்வர், மின் பற்றாக்குறை பிரச்சனையிலும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதற்காக தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி திட்டங்களுடன், பல புதிய திட்டங்களையும் முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் மின் பற்றாக்குறை வெகுவாக குறையும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+