நிலமோசடி புகார்: திமுக முன்னாள் எம்.பி வீட்டில் சி.பி.ஐ சோதனை
Subscribe to Oneindia Tamil
கோவை: நிலமோசடி புகாருக்கு ஆளான தி.மு.க முன்னாள் எம்.பி., கே.பி. பழனிச்சாமிக்கு சொந்தமான வீடு மற்றும் கடைகளில் சி.பி.ஐ யின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கே.பி. பழனிச்சாமி, கடந்த கடந்த 84முதல் 89 வரை தி.மு.க ஆட்சிக்காலத்தில் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இதனையடுத்து 89-91 வரை திருச்செங்கோடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இவர் மீது நில மோசடி புகார் உள்ளது. இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றப்பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
கே.பி.பழனிசாமிக்கு கோவையில் வீடு மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் உள்ளது. அங்கு சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications