கேஜ்ரிவால் தரும் நிதி வேண்டாம்... அன்னா அதிரடி

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் வழங்கும் நிதி எங்களுக்குத் தேவையில்லை என்று கூறி விட்டாராம் அன்னா ஹஸாரே. இந்த நிதியானது, ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின்போது திரட்டப்பட்டதாகும். அதை கேஜ்ரிவால் வழங்க முன்வந்தபோதும் வேண்டாம் என்று கூறி விட்டாராம் அன்னா.

அன்னாவுக்கும், அவரது வலது கரம் மற்றும் இடதுகரம் போலத் திகழ்ந்து வந்தவருமான கேஜ்ரிவாலுக்கும் இடையே இப்போது ஆகாமல் போய் விட்டது. கேஜ்ரிவாலின் அரசியல் திட்டங்களை அன்னா நிராகரித்து விட்டார். மேலும் இனிமேல் கேஜ்ரிவாலுடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்றும் கூறி விட்டார். அதை விட முக்கியமாக, இனிமேல் கேஜ்ரிவால் தரப்பினர் எனது படத்தையோ, பெயரையோ கூட உச்சரிக்கக் கூடாது, பயன்படுத்தக் கூடாது என்று கூறி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்து போன கேஜ்ரிவால், நீங்க படம் கொடுக்காட்டி என்னன்னா, உங்க முகத்தை இயத்தில் பதித்து வைத்திருக்கிறோம் என்று அட்டகாசமாக பதிலளித்தார்.

இந்த நிலையில், செப்டம்பர் 20ம் தேதி மகாராஷ்டிர சதனில் நடந்த ஒரு கூட்டத்தில் அன்னா, கிரண் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் போது திரட்டப்பட்ட நிதியை கேஜரிவால் தலைமையிலான பொது மக்கள் நலனுக்கான ஆராய்ச்சி பவுண்டேசனிடமிருந்து திரும்பப் பெற வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

அப்போது, கேஜரிவால் அந்த நிதியைத் திருப்பித் தர முன்வந்ததாகவும், ஆனால் அந்த நிதியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என அவரிடம் தெரிவித்து விட்டதாகவும் ஹசாரே தெரிவித்தார்.

இந்த சண்டை எங்கே போய் முடியமோன்னு தெரியலையே என்று ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் இப்போது அங்கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+