Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தசரா பண்டிகை: மைசூர் அரண்மனையில் சைக்கிள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

Mysore palace
மைசூர்: தசரா பண்டிகையின் போது மைசூர் அரண்மனையை அலங்கார விளக்குகளால் ஜொலிக்க செய்ய மின் தட்டுபாடு தடையாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் உதவுடன் சைக்கிள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அரண்மனை உலக புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் தசரா பண்டிகையின் போது, அலங்கார விளக்குகள் மூலம் அரண்மனையை ஜொலிக்க வைப்பது வழக்கம். இதற்காக அரண்மனையில் நிரந்தரமாக 15 வாட் திறன் கொண்ட 98,260 பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ஒருமித்து ஒளிர செய்தால் ஒரு மணிநேரத்திற்கு 1 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

ஆனால் தற்போது கர்நாடகாவில் கடும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே மைசூர் அரண்மனையில் உள்ள அலங்கார பல்புகளை ஒளிர செய்ய ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி டைனமோக்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய திறன் கொண்ட 10 சைக்கிள்கள் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிள்களை ஓட்டி, மின்சார உற்பத்திக்கு உதவலாம் என்று மைசூர் அரண்மணை வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது,

மைசூர் அரண்மனையில் சைக்கிள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மைசூர் அரண்மனை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து, ஒரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரண்மனையில் உள்ள எல்லா அலங்கார பல்புகளையும் ஒளிர வைக்க முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பல்புகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

சைக்கிள்களில் உள்ள டைனமோக்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் பேட்டரிகளில் சேமிக்கப்படுகிறது. இதை தசரா பண்டிகையின் போது பயன்படுத்தி பல்புகளை ஒளிர வைக்க முடியும்.

தினமும் அரண்மனைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த திட்டம் சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம். மேலும் சைக்கிள் ஓட்டுவது மூலம் கிடைக்கும் நன்மைகளையும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றனர்.

அடுத்த மாதம் (அக்டோபர்) 16ம் தேதி மைசூர் அரண்மனையில் தசரா பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையி்ல், சைக்கிள்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் சுற்றுப்பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேசமால் தமிழ்நாட்டில் இந்த சைக்கிள் டைனமோவை கட்டாயமாக்கிவிடலாமே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+