பி.ஆர்.பி. ஆலைக்கு சீல் வைத்ததை எதிர்த்து வழக்கு: தலைமைச் செயலர் உட்பட 4 பேருக்கு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை: கிரானைட் கொள்ளையில் ஈடுபட்ட பி.ஆர்.பி. ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உட்பட 4 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை மேலூர் அருகே தெற்குத்தெரு பி.ஆர்.பழனிச்சாமியின் ஆலைக்கு சீல் வைத்ததை எதிர்த்து அவரது மகன் சுரேஷ்குமார் வழக்கு தொடர்ந்தார். முறையாக கணக்குகள் இருந்தும் ஆலைக்கு சீல் வைத்ததால் தொழிலில் நட்டம் ஏற்பட்டதாக அம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு பதில்தர தலைமைச் செயலாளர், தொழில் செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications