Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிரா நீர்ப்பாசன திட்ட ஊழல்- கட்காரிக்கும் தொடர்பு.. வாயை கொடுத்து வலையில் சிக்கினார்!

Subscribe to Oneindia Tamil

Nitin Gadkari
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் சுனாமியை ஏற்படுத்தியிருக்கும் நீர்ப்பாசனத் திட்ட ஊழலில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரிக்கும் தொடர்பிருப்பதாக ஊழலுக்கு எதிரான இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தியிருக்கிறது நீர்ப்பாசனத் திட்ட ஊழல். இந்த விவகாரத்தில் துணை முதல்வர் அஜித் பவார் தமது பதவியை ராஜினா செய்தார். நீர்ப்பாசனத் திட்ட ஊழல் தேசியவாத காங்கிரசில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் ஊழலுக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த அஞ்சலி தமனியா என்பவர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அறிக்கையில் சொன்னது என்ன?

அஞ்சலி தமனியா வெளியிட்ட அறிக்கையில், மகாராஷ்டிராவின் நீர்ப்பாசன திட்ட ஊழலுக்கு எதிராக போராடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் மறுத்துவிட்டார். இதற்குக் காரணம் தேசியவாத காங்கிரசாருடன் அவருக்கு உள்ள வர்த்தக தொடர்புகள்தான் என்று பொத்தாம் பொதுவாகத்தான் கூறியிருந்தார்.

வாயைக் கொடுத்த கட்காரி..

அஞ்சலி தமனியாவின் அறிக்கையைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தாம் ஒருபோதும் அஞ்சலி தமனியா என்பவரை சந்திக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இத்தனைக்கு அஞ்சலி தமனியா, நிதின் கட்காரி பெயரை தமது அறிக்கையில் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாகத்தான் கூறியிருந்தார்.

வலையில் சிக்கினார்

கட்காரியின் விளக்க அறிக்கையால் வெகுண்டெழுந்த அஞ்சலி தமனியா பதிலடி கொடுத்திருக்கிறார்.

அஞ்சலி தமனியாவின் பதிலறிக்கையில், நிதின் கட்காரியை அவரது மும்பை இல்லத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி காலையில் சுமார் 10 மணியளவில் சந்தித்ததாக அஞ்சலி தமனியா கூறியுள்ளார்.

அப்போது இந்த நீர்ப்பாசனத் திட்ட ஊழல்களை பொதுமக்களின் நலன் கருதி அவரிடம் விவரித்தேன். அதற்கு கட்காரி, தமது கட்சியின் சோமையாவிடம் பொதுநல வழக்கு எதுவும் போட வேண்டாம். பொதுவாக பேரவையிலோ அல்லது பிரஸ் மீட்டிலோ சொல்லிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதாக தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதன் பின்னர் அன்று இரவு, நிதின் கட்காரியின் பெர்சனல் எண்ணுக்கு அவரது நிலைப்பாட்டினால் நாட்டுக்கு பெரும் பின்னடைவு என்று அதில் மெசேஜ் அனுப்பிவிட்டேன். நிதின் கட்காரியின் பெயரைக் கூட நான் முதலில் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் பொய் பேசியதால்தான் இப்பொழுது உண்மையை சொல்கிறேன் என்று கொந்தளித்துவிட்டார் தமனியா.

ஆக வாயைக் கொடுத்து வலையில் சிக்கிய கதையோ கையும் களவுமாக சிக்கிய கதையோ கட்காரிக்கு கன கச்சிதமாக பொருந்துதே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+