திருச்சி முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் மாரடைப்பால் மரணம்
திருச்சி: திருச்சி முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
திருச்சி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அடைக்கலராஜ்(76). அவர் திருச்சி மக்களைவைத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு அவர் 4 முறை வெற்றி பெற்று எம்.பி. ஆனார். கடந்த 1984ம் ஆண்டு தான் அவர் முதன்முதலாக மக்களைவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984, 1989 மற்றும் 1991ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். அடுத்ததாக 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார்.
தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் இன்று பிற்பகல் 1 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications