Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை மீண்டும் கைது செய்ய போலீஸ் தீவிர தேடுதல்

Subscribe to Oneindia Tamil

KN Nehru
திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை மீண்டும் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ஜாமீனில் நேரு..

திருச்சி மாவட்ட திமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு மீது நில அபகரிப்பு புகார்கள் சில மாதங்களுக்கு முன்பு பதிவாகின. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததால் நேரு தற்போது வெளியே உள்ளார்.

புது புகார்

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த சகுனவேல் அரியலூர் காவல்துறையில் கடந்த
25-ந் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில் தமது 17 ஏக்கர் நிலத்தை கே.என். நேருவின் உறவினர்களான கீழப்பழூர் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்தை மதிப்பை விட குறைவான விலைக்கு மிரட்டி வாங்கிக் கொண்டனர். நேருவின் தூண்டுதலாலேயே ரூ5 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ50 லட்சத்துக்கு மிரட்டி வாங்கினர் என்று சகுனவேல் புகார் கொடுத்திருந்தார்.

தகவல் பாஸ்.. தல எஸ்கேப்

இதையடுத்து திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராக நேரு வந்தால் தூக்கிவிடலாம் என்று காத்திருந்தது போலீஸ் டீம். ஆனால் தகவல் நேருவுக்கு பாஸ் செய்யப்பட அவர் ஆஜராகாமல் எஸ்கேப்பாகிவிட்டார். நேரு மனைவி மட்டும் இந்த வழக்கில் ஆஜரானார்.

முன்ஜாமீன் மனு?

நேருவை கோட்டை விட்டுவிட்ட போலீசார் அவரது இருப்பிடத்தைக் கண்டறிய தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் நேரு சார்பில் முன் ஜாமீன் கோரி இன்று மனுத்தாக்கல் செய்யப்படக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+