சித்தியை மிரட்டி உறவு கொண்ட சிறுவன்.. புகாரை சித்தியே மறுத்ததால் விடுதலை!

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அபுதாபியில் தனது சித்தியை மிரட்டி 2 வருடங்கள் அவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக சிறுவன் ஒருவன் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் புகார் கொடுத்த தந்தையும், சித்தியும் தங்களது புகாரை பின்னர் கோர்ட்டில் மறுத்து விட்டதால் சிறுவனை கோர்ட் விடுதலை செய்து வி்டது.

அபுதாபியைச் சேர்ந்த அந்த, சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அவன் மீதான புகார் என்னவென்றால், தனது தந்தையின் 2வது மனைவியை கடந்த 2 வருடங்களாக அவன் பல்வேறு விதங்களில் உறவு வைத்துக் கொண்டான். அந்தப் பெண்மணியை விட 9 வயது இளையவன் இந்த சிறுவன்.

ஒருமுறை இருவரும் படுக்கை அறையில் இருந்ததை சித்தியின் சகோதரி பார்த்து விட்டார். பின்னர் அதை சிறுவனின் தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து தந்தை மகனைக் கூப்பிட்டு விசாரித்தார். அவன் ஆமாம் என்று சொல்லவே சரமாரியாக அடித்தார். இதையடுத்து கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

ஆனால் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று தந்தையும், அவரது மனைவியும் வந்து கூறி விட்டார்கள். இதையடுத்து வழக்கை டிஸ்மிஸ் செய்த கோர்ட், சிறுவனை விடுவித்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+