பீகாரில் 40 எம்.பி தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம் - பாஜக அதிரடி

இதுகுறித்து பீகார் பாஜக தலைவர் சி.பி.தாக்கூர் கூறுகையில், ஐக்கிய ஜனதாதளத்துடன் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திப்பது சாத்தியமி்ல்லாததாக மாறியுள்ளது. எனவே 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் நாங்கள் தயாராகி வருகிறோம். இதை கட்சி மேலிடத்திற்கும் அறிக்கையாக அனுப்பி விட்டோம் என்றார்.
பீகாரில் பாஜகவுடன் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நிதீஷ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பலம் இருப்பதால் பாஜகவின் தயவு நிதீஷுக்குத் தேவையில்லை. இதனால் பாஜக குறித்த தனது கருத்துக்களை நிதீஷ் தைரியமாக எடுத்துரைத்து வருகிறார். குறிப்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பீகார் பக்கம் கூட வர விடாமல் அவர் பாஜகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.
மேலும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் நிதீஷுக்கும் பீகார் மாநில பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து பூசல் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் பீகாரில் உள்ள அத்தனை லோக்சபா தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடுவோம் என அம்மாநில பாஜக தலைவர் தாக்கூர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications