நில அபகரிப்பு.. கருணாநிதியின் 'முரட்டு பக்தர்' தூத்துக்குடி பெரியசாமி தலைமறைவு!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெண் ஒருவருக்குச் சொந்தமான 19.84 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டதாக தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, அவரது மகன் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பெரியசாமி தலைமறைவாகி விட்டார்.
திமுக தலைவர் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்று திமுகவினரால் செல்லமாக அழைக்கப்படுபவர் பெரியசாமி. தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக பல காலமாக இருந்து வருபவர். தூத்துக்குடி திமுகவில் அசைக்க முடியாத ஒரு நபர். இவரது மகள் கீதா ஜீவன் திமுக அமைச்சராக இருந்தவர்.
இந்த நிலையில் பெரியசாமி அவரது மகன் ஜெகன் உள்ளிட்ட 13 பேர் மீது நில அபகரிப்புப் புகார் கிளம்பியுள்ளது. தூத்துக்குடி கால்டுவெல் காலணியைச் சேர்ந்தவர் முகமது பாத்திமா. இவருக்கு தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் 19 ஏக்கர் 84 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தூத்துக்குடி மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமி, அவரது மகன் ஜெகன் உள்ளிட்ட 13 பேர் சேர்ந்து போ- ஆவணங்கள் மூலம் தனது நிலத்தை அபகரித்ததாக தூத்துக்குடி தெர்மல் நகர் காவல்நிலையத்தில் முகமது பாத்திமா புகார் செய்தார்.
இதில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. இதையடுத்து நெல்லையில் உள்ள அதிமுக வழக்கறிஞர்கள் சிலர், பெரியசாமியை நிலஅபகரிப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மேலும் அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் பெரியசாமி, அவரது மகன் உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications