சோனியா மருமகன் மீதான கெஜ்ரிவால் புகார் குறித்து விசாரணை தேவை: அன்னா ஹசாரே
மும்பை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வத்ரா மீதான அர்விந்த் கெஜ்ரிவாலின் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
சோனியாவின் மருமகன் வத்ரா, டி.எல்.எப் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக உதவியதாகவும் இதன் மூலம் ஆதாயம் அடைந்ததாகவும் அர்விந்த் கெஜ்ர்வால் அடுக்கடுக்கான புகார்களைக் கூறியிருந்தார். இதை சோனியாவும் காங்கிரஸ் கட்சியும் நிராகரித்திருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அர்விந்த் கெஜ்ரிவாலின் குருவான சமூக சேவகர் அன்னா ஹசாரே, இந்த புகார் பற்றி நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். இந்தப் புகாரில் உண்மை இல்லையெனில் அர்விந்த் கெஜ்ரிவால் மீது மானநாட்ட வழக்கு தொடரலாம் என்றார்.
அர்விந்த் கெஜ்ரிவால் தனிக் கட்சி தொடங்குவதால் அன்னா ஹசாரேவுடன் கருத்து வேறுபாடு என்று கூறப்பட்டாலும் கெஜ்ரிவாலை தொடர்ந்தும் அவர் ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications