சீனாவில் நிலச்சரிவு: 18 குழந்தைகள் மண்ணில் புதைந்து பலி

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பள்ளி குழந்தைகள் 18 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

சீனாவின் யுனான் மாகாணத்தில் வியாழக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் தொடக்க பள்ளி ஒன்று, 3 பண்ணை வீடுகள் மண்ணில் புதைந்தன. பள்ளியில் இருந்த 18 குழந்தைகளும் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். தேசிய நாளைக் கொண்டாடுவதற்காக விடுமுறைக்கு செல்ல இருந்த நிலையில் கடைசி நாளன்று பள்ளிக்கு வந்தனர். அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர்.

நிலச்சரிவில் மண்ணில் புதைந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் இயற்கை பேரிடர் மேலாண்மை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பலத்த மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து யுனான் மாகாண மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 81 பேர் உயிரிழந்தனர் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+