கேஜ்ரிவால் கட்சியின் விளம்பரத்துக்காக என்னை கேவலப்படுத்துறாங்க... வாய்திறக்கிறார் வத்ரா
டி.எல்.எப். நிறுவனத்துக்கான நிலம் வளைத்துப் போட தமது செல்வாக்கை பயன்படுத்திய ராபர்ட் வத்ரா, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்திருக்கிறார் என்று அர்விந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் தரப்பு குற்றம்சாட்டியிருந்தது.
இதை மறுத்து வத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில். அர்விந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் ஆகியோர் என் மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் வருத்தமளிக்கிறது. தாங்கள் தொடங்கியிருக்கும் புதிய கட்சிக்கான மலிவான விளம்பரம் தேடும் உத்தியாக கெஜ்ரிவாலும் பிரசாந்த் பூஷனும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. அடிப்படை ஆதாரமற்றவை. அவதூறு ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை. கடந்த 21 ஆண்டுகாலமாக நான் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். நான் சட்டத்துக்குட்பட்ட குடிமகன். எனது தொழில் நிறுவனங்களின் கணக்கு விவரங்கள் அனைத்துமே சம்பந்தப்பட்ட துறையினரிடம் வெளிப்படையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. உண்மை என்னவென்று அறிவதற்கு அவற்றை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்று கூறியுள்ளார்.
இதற்கு விரிவான பதில் ஒன்றை அளிக்கப் போவதாக கெஜ்ரிவாலும் பதிலடி கொடுத்திருக்கிறார்!