வீரபாண்டி ஆறுமுகத்திற்கு திடீர் நெஞ்சு வலி- சிகிச்சைக்குப் பின் மீண்டும் சிறையில் அடைப்பு
Subscribe to Oneindia Tamil

பல்வேறு வழக்குகளில் சிக்கிக் கைதான வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்துள்ளனர். இதனால் ஜாமீனில் கூட வர முடியாத நிலையில் இருக்கிறார் வீரபாண்டியார்.
அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர் டாக்டர்கள்.
இந்த நிலையில் சில நாட்களாக அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டது. நெஞ்சு வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று கூட்டிச் சென்றனர். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.
சோதனை மற்றும் சிகிச்சைக்குப் பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications