தர்மபுரி அருகே போதையில் ரகளை செய்த போலீஸ் ஏட்டு கைது!
தர்மபுரி: தர்மபுரி அருகே குடிபோதையில் பொது மக்களிடம் ரகளை செய்த ஏட்டுக்கு கைவிலங்கு போடப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (47). இவர் மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் இருந்து தர்மபுரி நோக்கி பைக்கில் தனது பைக்கில் சென்றுள்ளார். இவர் ஏற்கனவே, மது அருந்தி இருந்தால் மிகவுமம் போதையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், போதையில் இருந்த போலீஸ் ஏட்டு முருகேசன், பாப்பாரப்பட்டி கூட்ரோடு வழியாக சென்ற போது அங்கு சாலை அருகில் நின்று கொண்டிருந்த பொது மக்களை நோக்கி ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்துள்ளார். இதை தட்டிக் கேட்ட பொது மக்களை சிலரை அடிக்க பாய்ந்துள்ளார்.
உடனே இது குறித்து அருகில் இருந்தவர்கள் தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கும், பாக்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு பாலக்கோடு போலீசார் விரைந்து வந்தனர். அவர்களையும் ஏட்டு முருகேசன் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனையடுத்து, போதையில் ரகளை செய்த போலீஸ் ஏட்டு முருகேசனை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications