தமிழக சட்டசபை தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன்
ஆளுநர் ரோசய்யா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகராக இருந்து வந்த ஜெயக்குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தப் பதவிக்கு தற்போதைய துணை சபாநாயகர் தனபால் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்தது. அதிமுகவுக்கு சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மை பலம் இருப்பதால் தனபால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.
தேர்தல் நாளை நடைபெறுகிறது. நாளை தனபால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது முறைப்படி அறிவிக்கப்படும். அதன் பிறகு அவரை சபாநாயகர் இருக்கையில் முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள விஜயகாந்த்தும் அழைத்துப் போய் உட்கார வைக்க வேண்டும். ஆனால் விஜயகாந்த் சட்டசபைக்கு வருவது சந்தேகம் என்பதால் அவருக்குப் பதில் துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் அந்தப் பணியைச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.