திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி அடித்து கொலை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் திருவாரூரை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நத்தம் ரகுநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜதுரை(43). இவரை கடந்த 2004ல் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக வலங்கைமான் போலீசார் கைது செய்தனர். பின்பு ராஜதுரை ஜாமீனில் விடுதலையானார்.

இது தொடர்பான வழக்கு வலங்கைமான் நீதிமன்றத்தில் நடைபெறறு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜதுரைக்கு கடந்த 27.8.2008 அன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து ராஜதுரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறையில் உள்ள சில கைதிகளுக்கும், ராஜதுரைக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜதுரை தாக்கப்பட்டதில் உள்காயம் ஏற்பட்டு, சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் திடீரென இறந்து போனார்.

கடந்த 2 நாட்களாக நெஞ்சு வலிப்பதாக ராஜதுரை கூறி வந்துள்ளார். ஆனால் சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+