16 வயது சிறுமியுடன் ஊரை விட்டு ஓடிப் போன கண்டக்டர்
விழுப்புரம்: 16 வயதேயான சிறுமியுடன் காதல் கொண்டு வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார் ஒரு பஸ் கண்டக்டர். அவர்களைப் போலீஸார் சென்னையில் வைத்துப் பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ஆதிகிருஷ்ணன். இவரது மகள் திலகா. 16 வயதான திலகா, 9-வது வகுப்பு வரை படித்து இருக்கிறார். புதுச்சேரி கீழுரில் உள்ள ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
வேலைக்காக தினசரி தனியார் பேருந்தில் பயணிப்பார்.அப்போது பஸ் கண்டக்டரான 21 வயது பிரேம்குமாருக்கும், திலகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு கிளம்பினர். சென்னைக்கு வந்தனர். அங்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கவே ஊரை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி என்று தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு திலகாவுக்கு 16 வயதுதான் ஆவது தெரிய வரவே அவரை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இருவரது வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications