ஜெயலலிதா பிரதமராக அனைத்து தகுதிகளும் கொண்டவர்- சொல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் அதிமுக கட்சி சார்பில் மக்கள் பணி மற்றும் கட்சி பணிகளில் ஈடுபடுவது குறித்து பாராளுமன்ற தொகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோடு மஹாலில் நடைபெற்றது. அதிமுக மாவட்ட அவை தலைவர் பி.சி.ராமசாமி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நாட்டின் பிரதமராக அனைத்து தகுதிகளும் கொண்டவர் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழகத்தில் 3வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜெயலலிதா, அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆட்சி செய்து வருகிறார்.
முதியோர்களுக்கு உதவி தொகை உயர்வு, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவி தொகை, இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு லேப்-டாப் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெறும் பல திட்டங்களை பார்த்து, அவற்றை மற்ற மாநில முதல்வர்கள் அமல்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி, தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது. எனவே மாநில கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் தான், நாட்டின் பிரதமராக முடியும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், முதல்வர் ஜெயலலிதாவின் மதிப்பு உயரும். இதன்மூலம் அவர் இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்க முடியும். எனவே அதிமுக தொண்டர்கள், இதற்கு உறுதுணையாக செயல்பட்டு பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு வெற்றியை பெற்று தர வேண்டும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications