அழகு சிகிச்சை செய்து கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு
ஹாங்காங்கில் அழகு நிலையத்தில் சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கறுப்பாக இருப்பவர்கள் சிவப்பாகலாம். குண்டானவர்கள் ஒல்லியாகலாம் என்று அழகு நிலையங்கள் சார்பில் விளம்பரம் செய்யப்படுகிறது. இதனை நம்பி பலரும் அழகு சிகிச்சை நிலையங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து அழகு படுத்திக்கொள்கின்றனர்.
இதேபோன்று ஹாங்காங்கில் உள்ள அழகு சிகிச்சை நிலையத்தில் சில அழகு சிசிக்சைகளுக்கு புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையை போல, உடலின் ரத்தம் மாற்றப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சிகிச்சையை மேற்கொண்ட நான்கு பேரில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஆனால் இங்கு செய்யப்படும் அழகு சிசிக்சைகளுக்கு ரத்தத்தை மாற்ற தேவையில்லை என ஹாங்காங் தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்த விபரீத சிகிச்சையை பெண்கள் மேற்கொண்டதால் ஆபத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications